என் மேகம் ???

Sunday, April 8, 2012

ஜுராங் பேர்ட் பார்க் (சிங்கப்பூர் பயணம் - நாள் 5)
முந்தைய பாகத்திற்கு "இங்கே

ஷாப்பிங்க்கு முந்தைய கடைசி ஊர் சுற்றல் ஜுராங் பேர்ட் பார்க். ஜூ போலவே மெட்ரோ மற்றும் பஸ் பிடித்து போக வேண்டும். கிட்டதட்ட 30 நிமிடம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. சிங்கப்பூரில் எனது அதிக காத்திருப்பு இதுவே. பட்டர்பிளை பார்க், ஜூ எல்லாம் பார்த்துவிட்டதால், பறவைகள் பார்க்க கொஞ்சம் உற்சாகம் குறைந்துவிட்டது குட்டீஸ்க்கு. அவர்களை ஈர்த்து வந்தது “பேர்ட்ஸ் ஆப் ப்ளே” என்ற விளையாட்டு திடல் தான்... நீர் விளையாட்டு...

பார்க்கில் நுழைந்தவுடன் “பாராரயில்” டிக்கட் எடுத்துவிட்டோம். ட்ராமும் உண்டு...ஜூவில் ட்ராமில் போய்விட்டதால் இங்கு பாராரயில். முதலில் “லோரி லாஃப்ட்” நிறுத்தம். பறவைகளுக்கு உணவு அளித்தோம். சில பறவைகள் கிண்ணத்தைப் பிடித்து இழுக்கின்றன. சில, தைரியமாக நம் மேல் ஏறி காது, தலை எல்லாம் கொத்துகின்றன. பாரா ரயிலில் இருந்தே பறவைகளைப் பார்த்து நீர் விளையாட்டுக்கு வந்தோம். பிள்ளைகள் நீரில் விளையாட அருகே பறவைகள் பார்த்தோம். 3:30க்கு “பென்குவின் ஃபீடிங்”, 4:00 மணிக்கு “ஹாக் ஷோ” பார்க்க ப்ளான். ஆனால் மழை வந்ததால், “பென்குவின் ஃபீடிங்” மட்டும் பார்த்தோம்.



மறுநாள் ஷாப்பிங்குடன் சிங்கப்பூர் பயணம் இனிதே முடிந்தது.

No comments: